Saturday, January 5, 2019

பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா: மாணவர்களுக்கு CEO வாழ்த்து.

தர்மபுரி மாவட்டம், பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் யோகேஷ், பிளஸ் 1 மாணவன் ராஜா ஆகியோர், அறிவியல் கண்காட்சியில், சிறப்பிடம் பிடித்தனர். 10ம் வகுப்பு மாணவன் சக்திவேல், பெங்களூரில் நடக்க உள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சிறந்த படைப்புகளை சமர்ப்பித்த, 50 மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பின்லாந்து நாட்டுக்கு, 13 நாட்கள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல, அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, பின்லாந்து கல்வி சுற்றுலா செல்லும், யோகேஷ், ராஜா, பெங்களூர் அறிவியல் கண்காட்சி பங்கேற்கும் சக்திவேலுக்கு, தர்மபுரி சி.இ.ஓ., ராமசாமி, வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...