மருந்தாளுநர் காலிப்பணியிடத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், மருந்தாளுனர், 335 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், ஒருங்கிணைந்த பட்டியலின் பதிவு மூப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, கல்வித்தகுதி தமிழ்நாடு பார்மஸி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில், டிப்ளமோ இன் பார்மஸி படித்திருக்க வேண்டும். 2018, ஜூன், 1 அன்று எஸ்.சி.ஏ., - எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பிரிவினருக்கு, 57ம், பொதுப்பிரிவினருக்கு, 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்த பதிவுதாரர்கள் விபரம், அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் வரும், 7க்குள் தங்கள் பதிவினை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், மருந்தாளுனர், 335 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், ஒருங்கிணைந்த பட்டியலின் பதிவு மூப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, கல்வித்தகுதி தமிழ்நாடு பார்மஸி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில், டிப்ளமோ இன் பார்மஸி படித்திருக்க வேண்டும். 2018, ஜூன், 1 அன்று எஸ்.சி.ஏ., - எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பிரிவினருக்கு, 57ம், பொதுப்பிரிவினருக்கு, 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்த பதிவுதாரர்கள் விபரம், அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் வரும், 7க்குள் தங்கள் பதிவினை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment