சிறந்த கட்டுரை எழுதும் 25 மாணவிகளுக்கு கலெக்டருடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள மாணவிகளை கலெக்டர் இருக்கையில் அமரவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்குவதை அவர் வழக்கமாக செய்து வருகிறார். திருவண்ணாமலையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘என் கனவு’ என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கு மாணவிகள் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி என மொத்தம் 2,508 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் இதில் கலந்து கொண்டு சாதனை புரிகின்றனர். இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசியதாவது:
பெண் குழந்தைகள் சமுதாயத்தின் ஒரு பங்கு. அதனை எடுத்துரைக்கும் விதமாகவே தற்போது கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கடிதத்தில் மாணவிகள் தங்களது ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உயர்கல்வியில் என்ன படிக்க ஆசை, குழந்தை திருமணம் செய்யக் கூடாது என்பது குறித்து அஞ்சல் அட்டையில் எழுதலாம். இதில் சிறந்த கடிதம் எழுதிய 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்னுடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும். மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். பெண் குழந்தைகளை உங்கள் வீட்டில் உங்களுக்கு சமமாக நடத்துங்கள். அப்போது தான் சமுதாயத்திலும் அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசினார்.
பெண் குழந்தைகள் சமுதாயத்தின் ஒரு பங்கு. அதனை எடுத்துரைக்கும் விதமாகவே தற்போது கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கடிதத்தில் மாணவிகள் தங்களது ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உயர்கல்வியில் என்ன படிக்க ஆசை, குழந்தை திருமணம் செய்யக் கூடாது என்பது குறித்து அஞ்சல் அட்டையில் எழுதலாம். இதில் சிறந்த கடிதம் எழுதிய 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்னுடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும். மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். பெண் குழந்தைகளை உங்கள் வீட்டில் உங்களுக்கு சமமாக நடத்துங்கள். அப்போது தான் சமுதாயத்திலும் அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசினார்.
No comments:
Post a Comment