திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் சே.சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மேலாண்மை துறையில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்றற தமிழக அரசின் பொது நுழைவுத் தோ்வு எழுதிய மற்றும் எழுதாத மாணவா்களும் தற்போதுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவா்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்துடன் ரூ.650-க்கான வரைவோலையை (எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு ரூ.150) இணைத்து, துறைத் தலைவா், மேலாண்மையியல் துறை, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-12 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். வரும் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். அதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி நடைபெறவுள்ள குழு விவாதம் மற்றும் நோ்காணலில் பங்கேற்க வேண்டும். 13-ஆம் தேதி தகுதி அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...
-
Reporter Vacancy In Kumudam ( குமுதம் இதழுக்கு நிருபர்கள் தேவை)
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்ட படிப்புக்கான மாண...
-
மருத்துவ படிப்புக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா, 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின். மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்...
No comments:
Post a Comment