சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு தொடக்க நாளில், 117 மாற்றுத்திறனாளிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, முன்னாள் அவசியம்.தினரின் வாரிசுகளுக்கு சனிக்கிழமையன்றும், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையன்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
166 பேருக்கு அழைப்பு
முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இந்தப் பிரிவினருக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் ஒதுக்கப்படும் என்ற போதும், இந்த முறை 200-க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுள்ள 166 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். அதில் பார்வை குறைபாடுடைய 15 பேர் உள்பட 117 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர்
முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள்:
இதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடத்தப்படுகிறது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்
விளையாட்டுப் பிரிவினர்:
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 500 இடங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டியது அவசியம்.
பொதுப் பிரிவு கலந்தாய்வு:
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் இறுதி செய்யவில்லை.
தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
166 பேருக்கு அழைப்பு
முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இந்தப் பிரிவினருக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் ஒதுக்கப்படும் என்ற போதும், இந்த முறை 200-க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுள்ள 166 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். அதில் பார்வை குறைபாடுடைய 15 பேர் உள்பட 117 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர்
முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள்:
இதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடத்தப்படுகிறது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்
விளையாட்டுப் பிரிவினர்:
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 500 இடங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டியது அவசியம்.
பொதுப் பிரிவு கலந்தாய்வு:
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் இறுதி செய்யவில்லை.
No comments:
Post a Comment